பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு அவரது தவறுகளைச் சரிசெய்ய ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டர்.
“பிரதமர் மிகுந்த குறைகூறல்களுக்கு இலக்காகி இருப்பதை அறிவேன். ஆனாலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
“தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் அவற்றை வெளிப்படுத்தவும் வேண்டும்.
“எல்லாரும் தவறு செய்வது உண்டு. அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். திருந்தி சரியானது எதுவோ அதைச் செய்ய வேண்டும்”. த ஸ்டார் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் சுல்தான் இவ்வாறு கூறினார்.
தாம் அரசியலுக்கு அப்பாற் பட்டவர் என்பதை வலியுறுத்திய சுல்தான், நஜிப் அணி, முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அணி என்று எந்த அணியையும் ஆதரிப்பதில்லை என்றார்.
நஜிப் அல்லது முகைதினைச் சந்திக்கும்போது தாம் அரசியல் பேசுவதில்லை என்றவர் சொன்னார்.
…………எதுக்கு வாய்ப்பு கொடுக்கோணும் ,இருக்கிறதை சொரண்டி எடுக்கவா…………
பொது மக்கள் நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் வரை,நஜிப்புக்கு வாய்ப்பளிக்கலாம்.
எந்தவகையான தவறு செய்தாலும் மன்னிக்கலாம்.எதிர்கச்சியாலர்களுக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது. (undang-undang ) malaysia boleh!
மக்கள் சுமையை குறைக்க சொல்லுங்கள்.சேவை வரி,பெட்ரோல் விலை உயர்வு,நாணய மதிப்பு வீழ்ச்சி,இனத்துவேசம்,பாதுகாபற்ற சூல்நிலை ஆகியவைக்கு தீர்வு காணட்டும்.பிறகு வாய்ப்பு வழங்குவது மக்கள் தீர்ப்பு.
செம்மொழி (Classical language) ஆகிய தமிழ்(Thamil/Tamil) மொழியில், இரண்டு சொற்கள் உள்ளன. தவறு: தன்னை அறியாமல் செய்வது. தப்பு: தெரிந்தே திட்டமிட்டு (சூழ்ச்சி செய்து) செய்வது. தவறை மன்னிக்கலாம். தப்பை….?
மனித ஆன்மாக்கள் அனைத்தும் சொர்க்கத்தில் இருந்து வருகின்றன. பின்னர், அதர்மம்-அநீதி செய்வதற்கென்றே பெரிய கூட்டம் உருவாகி, மரணத்தின் பின் நரகத்திற்கு சென்று வலியை அனுபவிக்கின்றன. இதுவே வரலாற்றில் பற்பல காலகட்டங்களில் நடந்தன.
………….கொக்கொரோக்கோ………….
……………நாடு திவால்