ஜோகூர் சுல்தான்: நஜிப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்

chanceபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு   அவரது  தவறுகளைச்  சரிசெய்ய  ஒரு  வாய்ப்பு  கொடுக்கப்பட  வேண்டும்  என்கிறார்  ஜோகூர்  ஆட்சியாளர்  சுல்தான்  இப்ராகிம்  இஸ்கண்டர்.

“பிரதமர்  மிகுந்த  குறைகூறல்களுக்கு  இலக்காகி  இருப்பதை  அறிவேன். ஆனாலும்  அவருக்கு  வாய்ப்பு  அளிக்கப்பட   வேண்டும்  என  நினைக்கிறேன்.

“தீர்க்கப்பட  வேண்டிய  விவகாரங்கள்  உள்ளன.  அதே  நேரத்தில் அவற்றை  வெளிப்படுத்தவும்  வேண்டும்.

“எல்லாரும்  தவறு  செய்வது  உண்டு. அவற்றிலிருந்து  பாடம்  கற்றுக்கொள்ள  வேண்டும். திருந்தி  சரியானது  எதுவோ  அதைச் செய்ய   வேண்டும்”.  த ஸ்டார்  நாளேட்டுக்கு  வழங்கிய  நேர்காணலில்  சுல்தான்  இவ்வாறு  கூறினார்.

தாம்  அரசியலுக்கு  அப்பாற் பட்டவர்  என்பதை  வலியுறுத்திய  சுல்தான்,   நஜிப்  அணி,  முன்னாள் துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  அணி  என்று  எந்த  அணியையும்  ஆதரிப்பதில்லை  என்றார்.

நஜிப்  அல்லது  முகைதினைச்  சந்திக்கும்போது  தாம்  அரசியல்  பேசுவதில்லை  என்றவர்  சொன்னார்.