ரிம2.6 பில்லியன், எஸ்ஆர்சி விசாரணை அறிக்கைகளை எம்எசிசி அடுத்த வாரம் தாக்கல் செய்யும்

 

 மலேசியா ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6 பில்லியன் மற்றும் 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி ஆகியவை பற்றிய அதன் விசாரணை அறிக்கைகளை அடுத்த வாரம் தாக்கல் செய்யும் என்று கூறுகிறது.

அந்த இரு விசாரணைகளும் சுயேட்சையாகவும், வெளிப்படையாகவும், தொழிலியல்படியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று எம்எசிசியின் சிறப்பு நடவடிக்கை இயக்குனர் பஹாரி முகமட் ஸின் இன்று (டிசம்பர் 27) வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

வழக்கு தொடர்வதற்கான ஆதாரம் இருக்குமானால், எம்எசிசி சட்டத்துறை தலைவரிடம் (ஏஜி) அடுத்த வாரம் தாக்கல் செய்யவிருக்கும் அதன் விசாரணை அறிக்கையில் வழக்குத் தொடர்தலுக்கு பரிந்துரைக்கும் என்று பஹாரி தெரிவித்தார்.