செக்ஸ் அடிமைகளை எப்படி நடத்தணும்? அறிவுரைகள் கூறும் ஐஎஸ்

Isis sells women-being-sold-in-Mosulசெக்ஸ் அடிமைகளை முதலாளிகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து 15 அறிவுரைகளை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பகுதியை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கிய ஐஎஸ் அமைப்பு பல்வேறு கொடூர நிகழ்வுகளை அரங்கேற்றி வருகிறது.

இவர்களை அழிக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி செக்ஸ் அடிமைகளாக சமூக வலைத்தளங்களில் விற்று வருகின்றனர், பெண்கள் என்றால் 15000 பவுண்டுகளும், சிறுமி என்றால் 10000 பவுண்டுகளும் விலையாக நிர்ணயித்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் நகர்களில் இருந்து கடத்திவரப்படும் பெண்களை புகைப்படம் எடுத்து, அதை சமூகவலைத்தளங்களில் பரப்பி விடுகின்றனர்.

சிலநேரங்களில் பணத்திற்காக அதே குடும்பத்தினரிடம் விற்றுவிடும் நிலையும் உள்ளது.

இந்நிலையில் செக்ஸ் அடிமைகளை முதலாளிகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்த 15 அறிவுரைகளை வெளியிட்டுள்ளனர்.

* மாதவிடாய் காலத்தின் போது அதுமுடிந்து சுத்தமாகும் வரை உறவு கொள்ளக்கூடாது.

* பெண் கர்ப்பமாகிவிட்டால், குழந்தை பிறக்கும் வரை உறவு கொள்ளக்கூடாது.

* ஒருவர் அக்கா, தங்கச்சியை வாங்கியிருந்தால் அவர்களில் ஒருவரடன் தான் உறவு கொள்ள முடியும் இதேபோன்று 15 அறிவுரைகளை வெளியிட்டுள்ளனர்.

-http://world.lankasri.com