இஸ்ரேல் மது விடுதியில் தீவிரவாதி தாக்குதல்?: 2 பேர் பலி….பலர் படுகாயம் (வீடியோ இணைப்பு)

isrel_barattack_001இஸ்ரேல் நாட்டில் உள்ள மது விடுதி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான டெல் அவிவ் என்ற நகரில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இதே நகரில் உள்ள Dizengoff என்ற சாலையில் உள்ள மது விடுதி ஒன்றில் இன்று உள்நாட்டு நேரம் பிற்பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஈடுப்பட்ட நபர் M-16 என்ற தானியங்கி துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகியுள்ளதுடன், 9 நபர்களுக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், மது விடுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும், அப்பகுதி முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள் உடனடியாக மூடப்பட்டன.

இஸ்ரேல் அரசு செய்திதொடர்பாளரான Micky Rosenfeld என்பவர் கூறுகையில், இந்த தாக்குதல் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும், இதன் பின்னணியில் தீவிரவாதிகளா அல்லது தனி நபர் இருக்கிறா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என கூறியுள்ளார்.

புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டால், டெல் அவிவ் நகர் முழுவதும் பரபரப்பு காணப்படுகிறது.

-http://world.lankasri.com