ஜோகூர் சுல்தான் மூவார் மக்களுடன் பசியாறினார்

johorஜோகூர்  ஆட்சியாளர்  சுல்தான்  இப்ராகிம்  இன்று  காலை மூவாருக்கு  திடீர்  வருகை  புரிந்து  மக்களுடன்  மக்களாக  அமர்ந்து  காலை  உணவை  உட்கொண்டார்.

சுல்தான்,  மூவார்  மாவட்ட  ஆட்சியர்  ரம்லி  ஏ. ரஹ்மானுடன் காலை  மணி  6.45க்கு  ஜாலான்  சாலேயில்  உள்ள  மாஸ்  ஜெயா  வணிக  மையத்துக்கு  வந்தார். வந்தவர்  அல் சியா  பத்திமா  உணவகம்  சென்று  ரொட்டி  சானாய்  சாப்பிட்டார்.

அங்கு  மக்களுடன்  அளவளாவினார்.   பலர் சுல்தானுடன்  சேர்ந்து  படமெடுத்துக்  கொள்வதில்  ஆர்வம்  காட்டினார்கள்.

ஒரு  மணி  நேரம்  அங்கு  செலவிட்ட  சுல்தான்  பின்னர்  அங்கிருந்து  இஸ்தானா  தஞ்சோங்க்கு  தாமே  காரை  ஓட்டிச்  சென்றார்.