ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இன்று காலை மூவாருக்கு திடீர் வருகை புரிந்து மக்களுடன் மக்களாக அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்.
சுல்தான், மூவார் மாவட்ட ஆட்சியர் ரம்லி ஏ. ரஹ்மானுடன் காலை மணி 6.45க்கு ஜாலான் சாலேயில் உள்ள மாஸ் ஜெயா வணிக மையத்துக்கு வந்தார். வந்தவர் அல் சியா பத்திமா உணவகம் சென்று ரொட்டி சானாய் சாப்பிட்டார்.
அங்கு மக்களுடன் அளவளாவினார். பலர் சுல்தானுடன் சேர்ந்து படமெடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்.
ஒரு மணி நேரம் அங்கு செலவிட்ட சுல்தான் பின்னர் அங்கிருந்து இஸ்தானா தஞ்சோங்க்கு தாமே காரை ஓட்டிச் சென்றார்.
சில நிகழ்வுகள் இவருக்கு ஞானோதயம் கொடுத்திருப்பதை அறியலாம் அவர் மாபெரும் வல்லவர் யார் ? இறைவன் அவருக்கு தெரியும் ஒவ்வொருவரையும் எப்படி ஆட்டி படிக்கலாம் என்று . இல்லையேல் இந்த நிலை வர வாய்பில்லை .