பொங்கலுக்கு முன்னர் அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படுவர்! மீன்பிடித்துறை அமைச்சர்

fisher manஇந்தியாவுடன் நிலவும் சிறந்த நட்பின் அடிப்படையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் எதிர்வரும் 15 தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவர் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களை தடுத்து வைப்பதில் இலங்கை அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. எனினும் அவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை தடுக்க வேண்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் அரசியல்வாதிகளின் படகுகளிலேயே பெரும்பாலான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர்.

இறுதியாக கடந்த வாரம் 29 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 84 ஆகும். 62 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

-http://www.tamilcnnlk.com

TAGS: