தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் சமூகம் ஈழக் கனவை கைவிடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெஹிவலை அத்திடிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது விசேட நீச்சல் தடாகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இராணுவத்தை மறுசீரமைக்குமாறு எந்தவொரு நாடும் அழுத்தம் கொடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தை மறுசீரமைக்குமாறு உலகின் எந்தவொரு நாடும் இலங்கைக்கு அழுத்தங்களையோ அல்லது யோசனைகளையோ முன்வைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டு பின்னர் வெளிநாடுளுக்கு சென்று தங்கியுள்ள புலம்பெயர் தமிழர்கள், இன்னமும் ஈழக் கனவை கைவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசாங்கம் நாட்டை பிளவடையச் செய்வதாக சில தரப்பினர் பிழையான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
-http://www.athirvu.com
நீங்களே என்னை ஊற்றி வளர்த்து கொண்டு இருகின்றீர்கள் ….அடுத்த சுனாமி மிகவும் பலமானதாக இருக்கும் ..எந்த நாடும் உங்களுக்கு உதவாது