சமஷ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களுக்கான தீர்வாக அமைய முடியும்: கூட்டமைப்பு

tna_logoதமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வே தீர்வாக அமைய முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான கூட்டம் கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது இந்த முடிவு மீண்டும் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு, அதையும் உள்ளடக்கி அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகள் முன் வைக்கப்படும் என்றும், இந்த வருட இறுதிக்குள் இந்தத் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: