ஐக்கிய இராச்சியத்தில் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாட்டில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அதிகாரப் பரவலாக்கல் கோரிக்கைகளை முன்வைத்த அரசியலமைப்பு யோசனைகளை முன்வைக்கவுள்ளது. இதுதொடர்பில் ஆராய்வதற்காகவே இரா.சம்பந்தன் பிரித்தானியா சென்றுள்ளார்.
பிரித்தானியா சென்றுள்ள இரா.சம்பந்தனுடன், கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை இணைந்து கொள்வார் என்று தெரிகின்றது.
இதேவேளை, பிரித்தானியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது. அந்தக் கலந்துரையாடலிலும், இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர், இருவரும் ஸ்கொட்லாந்து செல்லவுள்ளனர்.
இதனிடையே, பிரி்த்தானியா சென்றுள்ள இரா.சம்பந்தன் அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-http://4tamilmedia.com
ஸ்காட்லாந்தின் சமஸ்டி அரசியலமைப்பை போன்று தமிழ் ஈழத்திற்கு கிடைக்குமானால் அது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றே.ஆனால் அதற்கும் குறைவான அதிகாரங்களை கொண்ட சமஸ்டி ஆட்சி முறையினை ஈழத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.குறிப்பாக இந்தியாவில் உள்ள மாநிலங்களின் அதிகாரங்கள் போல சட்ட வரைவுகளை ஈழத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.அதற்கு இசைந்தால் அப்புறம் தமிழ் நாட்டைப்போல் நாளை ஈழமும் சீரழிந்து விடும்.எப்படி தமிழ் நாட்டான் வடவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறானோ அதேப்போல் ஈழத் தமிழனும் காலங்கலமாக சிங்களவனுக்கு அடிமை பட்டுக் கிடக்கும் நிலை வரலாம்.1707 இல் ஸ்காட்லான்ட் இங்கிலாந்துடன் இனைகப்ப்ட்டாலும் அது தனது தேசிய அடையாளத்தை இழக்காமல் தனி நாடாளுமன்ற சமஸ்டி அதிகாரத்தை கொண்டுள்ளது.ஆகவே அத்தகைய ஒரு சமஸ்டி முறை தற்போதைக்கு காயம்பட்டுள்ள ஈழத்துக்கு ஒரு தற்காலிக தீர்வாக் அமைய வாய்ப்புள்ளது.அதோடு எதிர்காலத்தில் ஒன்றிணைந்த இலங்கையில் இருந்து ஈழம் பிரிய வேண்டும் என்று நினைத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து செல்லலாம் என்ற ஷரத்தும் சேர்க்கப் பட வேண்டும்.
இந்த பழைய கள்ளு எதுவும் சரிவராது …
ஈழ பிரச்சினை இப்பொது சர்வதேச பிரச்சினை …இலங்கையில் கால் ஊன்ற இந்தியா ..அமெரிக்கா ..சீனா எல்லாம் போட்டி ..வெல்லபோவது சீனாதான் ..ஈழ தமிழர்கள் ஆதரவில் ..பி இந்தியாவின் நிலை பூனைகள் ..ஆப்பம் பிரித்த கதிதான்
இதைத்தானே இந்தியாவும் சொல்லிக் கொண்டிருக்கிறது? இது நடக்கும் என்றே தோன்றுகிறது.