சிருல்: அல்டான்துயா கொலையில் ‘நஜிப் சம்பந்தப்படவில்லை’

sirulபோலீஸ்  அதிரடிப்படையின்  முன்னாள்  வீரரான   சிருல்  அஸ்ஹார்,  2006-இல்  மங்கோலிய  பெண்  அல்டான்துன்யா  கொல்லப்பட்டதில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எந்த  வகையிலும்  தொடர்பில்லை  என்று  சத்தியம்  செய்கிறார்.

“சில  தரப்புகள்  குறிப்பிட்ட   ஒருவரைக்  கவிழ்க்கும்  நோக்கத்தைக்  கொண்டிருப்பதாக  அறிகிறேன். ஆனால்,  யாரையும்  பழித்துரைக்கும்  பழக்கம்  எனக்கு  இல்லை.

“ஒருவரைப் பற்றி  அவதூறு  கூறுவது  பெரும்  பாவம்….. இறைவன்  பெயரால்  சொல்கிறேன்  மதிப்புக்குரிய பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  அந்த  விவகாரத்தில்  சம்பந்தமே  இல்லை”, என்று  காணொளி  ஒன்றில்  சிருல்  கூறினார்.

எந்த  விவகாரம்  என்பதை  அவர்  குறிப்பிடவில்லை.  ஆனால்,  இதற்குமுன்  வந்துள்ள  காணொளிகளை  வைத்துப்  பார்க்கையில்  அவர்  அல்டான்துயா   கொலையைத்தான்  குறிப்பிடுவதாக  அனுமானிக்க  முடிகிறது.

அது  சிருலிடமிருந்து  வந்ததாகக்  கூறப்படும்  மூன்றாவது  காணொளியாகும். பெயர்  தெரிவிக்க  விரும்பாத  ஒருவர்  மூலமாக  அது  மலேசியாகினியின்  பார்வைக்கு  வந்தது.