பிஏசி தலைவர்: 1எம்டிபி கணக்காய்வு தொடரும்

pac chதேசிய  கணக்காய்வுத்  துறை (ஜேஏன்)  1எம்டிபி  மீதான  இறுதி  கணக்கறிக்கையை   தாக்கல்  செய்வது  தாமதப்படலாம்   என்று  கூறப்பட்டிருப்பதை  நாடாளுமன்ற  பொதுக்  கணக்குக்குழு (பிஏசி)  மறுத்துள்ளது.

“தேசிய  கணக்காய்வுத்  துறை  1எம்டிபி  மீதான  இறுதி  கணக்காய்வு  அறிக்கையை (திட்டமிட்டபடி)  பிப்ரவரியில்   தாக்கல்  செய்யும்  என்பதை  பிஏசி  வலியுறுத்துகிறது”,  என  அதன்  தலைவர்  ஹசன் அரிபின்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.