முக்ரிஸ் பதவி விலகினார்: பாஷா கெடாவின் புதிய எம்பி

mukrகெடாவில்  இரண்டு  வாரம்  நீடித்த  அரசியல்  நெருக்கடி  முடிவுக்கு  வந்தது. மந்திரி  புசார்  பதவியைவிட்டு  விலக  முக்ரிஸ்  மகாதிர்  முன்வந்தார்.

இன்று  தம்  பதவி  விலகலை  அறிவித்த  முக்ரிசிடம்  அடுத்த  மந்திரி  புசார்  யார்  என்று  வினவியதற்கு,“அஹ்மட்  பாஷா   முகம்மட்  ஹனாப்யாதான்” என்றார். கூடவே, “பதவி  ஏற்பின்போது  அவர்  தூங்கி  விடாமலிருக்க  வேண்டும்”,  என்றும் சொன்னார்.

முக்ரிசின்  பதவி  விலகலுக்காகக்  கோரிக்கை விடுத்துவந்த  பாஷா   கெடா   அம்னோ துணைத்  தலைவருமாவார்.

பாஷா  கூட்டங்களின்போது  தூங்கி விடும்  பழக்கம்  உள்ளவராம்.  அதைச்  சொல்லி  முக்ரிஸ்- ஆதரவு  வலைத்தளங்கள்  கேலி  செய்வதுண்டு.