கெடாவில் இரண்டு வாரம் நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது. மந்திரி புசார் பதவியைவிட்டு விலக முக்ரிஸ் மகாதிர் முன்வந்தார்.
இன்று தம் பதவி விலகலை அறிவித்த முக்ரிசிடம் அடுத்த மந்திரி புசார் யார் என்று வினவியதற்கு,“அஹ்மட் பாஷா முகம்மட் ஹனாப்யாதான்” என்றார். கூடவே, “பதவி ஏற்பின்போது அவர் தூங்கி விடாமலிருக்க வேண்டும்”, என்றும் சொன்னார்.
முக்ரிசின் பதவி விலகலுக்காகக் கோரிக்கை விடுத்துவந்த பாஷா கெடா அம்னோ துணைத் தலைவருமாவார்.
பாஷா கூட்டங்களின்போது தூங்கி விடும் பழக்கம் உள்ளவராம். அதைச் சொல்லி முக்ரிஸ்- ஆதரவு வலைத்தளங்கள் கேலி செய்வதுண்டு.
நாடாளுமன்ற, சட்டமன்ற கூட்டங்களின்போது, யார்தான் தூங்கவில்லை. தூங்குமூஞ்சி பயல்களை கொண்ட அரசு நம் அரசு. ஒருமுறை நாடாளுமன்ற கூட்டத்தின்போது, பெரும்பாலோர் மன்றத்திலே தூங்கிக் கொண்டிருந்தார்கள். அன்றைய கர்ஜிக்கும் சிங்கமான பி.பட்டு, இதனை சபாநாயகர் பார்வைக்கு கொண்டு சென்றார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், ” தூங்குவது தப்பில்லை, குறட்டை விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.” என்றார். இவர்கள் மீது தப்பில்லை. இந்த தூங்குமூஞ்சிகளை தேர்வு செய்யும் தூங்குமூஞ்சி வாக்காளைகளை சவுக்கால் நாலு விளாசு விலாசவேண்டும்.
இந்தோனேசியாவில் போராபுதூர், பெரம்பனான். கம்போடியாவில் அங்கோர் வாட். தாய்லாந்தில் அருண் வாட். லாவோசில் லாங் பிரபாங். மற்றும் சிலோன், நேப்பாள்,வியட்நாம் போன்ற இடங்களில் உள்ள ஹிந்து சாம்ராஜ்ய பொக்கிஷங்களை, [ஆலயங்களை] புத்த சாம்ராஜ்ய கல்வெட்டுகளை, அந்நாடுகள் அழித்ததில்லை. இன்றும் சுற்றுப்பயணிகளின் பார்வைக்கு வைத்து, நாட்டிற்கு வருமானமும் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், நாம் என்ன செய்தோம்? 14ம் நூற்றாண்டின் சோழ சாம்ராஜ்ய பொக்கிஷங்கள், கெடாவின் [கடாரம்] பூஜாங் பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது. அதன் ஒரு பகுதியை புல்டோசர் கொண்டு இடித்து தரை மட்டமாக்கியது, இந்த முக்ரிஸ் ஆட்சியில். பாவம் சும்மா விடவில்லை போலும். 1992ல் கெடாவின் குனோங் ஜெராய் மலை உச்சியில், நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த ஹிந்து கோவில் ஒன்றை ராணுவத்தினரை வைத்து இடித்து தள்ளியது, அன்றைய மகாதிமிர் ஆட்சி. பாவம் சும்மா விடவில்லை போலும், இன்னும் அரசியலில் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
மகாதீர் வளர்த்த முக்ரீஸ் ஆட்டு கெடாவை வெட்டிட்டாரெ நம்பிக்கை நாயகர், , ,
நன்றி – நல்ல சிந்திக்கவேண்டிய உண்மைகள் .
இந்த ஈன ஜென்மங்கள் அவன்களின் மூதாதையர்களின் நினைவு இருந்திருந்தால் இவ்வளவு ஈன செயல்களை செய்திருக்கமாட்டன்கள். காகாதிமிர் ஆரம்பித்து வைத்தது இப்போது ஆலமரமாய் வளர்ந்து விட்டது. வெட்ட முடியுமா? அதிலும் மலாயக்கரன்களுக்கு நன்றியை பற்றி என்ன தெரியும்? அதைப்பற்றி அக்கறை என்ன? நம்மிடமிருந்து கலை கலாசாரத்தை இரவல் வாங்கி இருந்தாலும் என்னமோ நாம்தான் இவனகளிடமிருந்து இரவல் வாங்கியது போல் தோற்றம்.