டேவானில் தூங்கும் பழக்கம் இல்லை- கெடாவின் புதிய மந்திரி புசார்

dozeகெடாவின்  மந்திரி  புசாராக  நியமிக்கப்பட்டிருக்கும் அஹ்மட்  பாஷா   முகம்மட்  ஹனாப்யா   மாநிலச்  சட்டமன்றக்  கூட்டங்களில்  தாம்  என்றும்  குட்டித்   தூக்கம்  போட்டதில்லை  என்று  திட்டவட்டமாகக்  கூறி  இன்று  காலை  முக்ரிஸ்  மகாதிர்  அவர்  தூங்கும்  பழக்கம்  உள்ளவர்  எனக்  கூறியிருந்ததை  மறுத்தார்.

குட்டித்  தூக்கம்  போடுவதைப்போல்  கண்களை  மூடிக்  காண்பித்த  அவர்,  “சில  நேரங்களில்  இப்படி  இருப்பதன்  மூலம்  கூடுதல்  கவனம்  செலுத்த  முடிகிறது”  என்றார்.

அவர்  தூங்குவதைக்  காண்பிக்கும்  காணொளிகள்  இணையத்  தளங்களில்  உலா  வந்து  கொண்டிருக்கின்றன.

“இணையத்திலும் போட்டிருக்கிறார்கள். ஆனால்  நான் தூங்கவில்லை.

“நான்  தூங்கவில்லை  என்பதைப்  பிரதமரிடமும்  சொன்னேன்.  அதற்கு  அவர்  டேவானில்  கண்ணை  மூடிக்  கொண்டிருப்பது  சகஜம்தான்  என்றார்”,  என அஹ்மட்  பாஷா கூறினார்.