கெடாவின் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டிருக்கும் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனாப்யா மாநிலச் சட்டமன்றக் கூட்டங்களில் தாம் என்றும் குட்டித் தூக்கம் போட்டதில்லை என்று திட்டவட்டமாகக் கூறி இன்று காலை முக்ரிஸ் மகாதிர் அவர் தூங்கும் பழக்கம் உள்ளவர் எனக் கூறியிருந்ததை மறுத்தார்.
குட்டித் தூக்கம் போடுவதைப்போல் கண்களை மூடிக் காண்பித்த அவர், “சில நேரங்களில் இப்படி இருப்பதன் மூலம் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது” என்றார்.
அவர் தூங்குவதைக் காண்பிக்கும் காணொளிகள் இணையத் தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
“இணையத்திலும் போட்டிருக்கிறார்கள். ஆனால் நான் தூங்கவில்லை.
“நான் தூங்கவில்லை என்பதைப் பிரதமரிடமும் சொன்னேன். அதற்கு அவர் டேவானில் கண்ணை மூடிக் கொண்டிருப்பது சகஜம்தான் என்றார்”, என அஹ்மட் பாஷா கூறினார்.
தம்பி பாஷா! பயப்படவேண்டாம்! “யாரும் செய்யாத காரியத்தை நான் செய்துவிடப் பார்க்கிறேனா?” என்று பதிலடி தர வேண்டியதுதானே! ஒருமுறை, நாடாளுமன்ற கூட்டம் நடைப்பெற்ற போது, பி.பட்டு அவர்களின் guest ஆக பார்வையாளராக, உள்ளே அமர்ந்திருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோர் தங்களது நாற்காலிகளிலே தூங்குவதை பார்த்த எனக்கே தூக்கம் வந்துவிட்டது. இவர்கள் தூங்கி தூங்கியே நமது நாட்டுக்கும் ‘பாடை’ கட்டிவிட்டார்கள்.
என்னேதே சொல்ல .மக்கள் வரி பணம் வினாகி போகிறது .
டேவானில் கெடாவின் மந்திரி புசாராக என்ன செய்யலாம் என்று கண் மூடி யோசித்து கொண்டிருந்தவரை, குட்டி தூக்கம் போட்டு கொண்டிருக்கிறார் என்று தவறுதலாக நினைத்ததின் விளைவு தனது “மந்திரி புசார்” பதவி கவிழ்ப்பு என்பதை இப்போதாவது உணருவாரா முக்ரீஸ் ?