நஜிப் நன்கொடை விவகாரம் தீர்ந்தது வணிகத்தை ஊக்குவிக்கும்

clearரிம2.6 பில்லியன்  நன்கொடை  விவகாரத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  குற்றமற்றவர்  என்ற  சட்டத்துறைத்  தலைவரின்  (ஏஜி)  அறிவிப்பு   நாட்டின்  வர்த்தகத்தை  ஊக்குவிக்கும்  உந்துவிசையாக  இருக்கும்  என  அமைச்சர்  ஒங்  கா  சுவான்  கூறினார்.

“அது (ஏஜி  முகம்மட் அபாண்டி  அலியின்  அறிவிப்பு) ஓரளவுக்கு  உதவும். அங்கிருந்து  நிலைமை  மேம்படும்  என்று  நம்புகிறேன்.

“சந்தேகங்களும்  நிச்சயமற்ற  நிலைமையும்தான்   முதலீட்டாளர்களின்  நம்பிக்கையைக்  கெடுத்து  வைத்திருந்தன……அவர்கள்  முதலீடு  செய்ய  முன்வரவில்லை.

“அந்த  நம்பிக்கையைத்  திரும்ப கொண்டுவர  வேண்டும்”, என்றாரவர். ஒங்  கா  சுவான் இரண்டாவது அனைத்துலக  வர்த்தக,  தொழில்  அமைச்சராவார்.