ரிக்டர் கருவியில் 6.4 என்று பதிவான நிலநடுக்கம் நேற்றிரவு மணி 12.19க்கு சாலமன் தீவுகளைத் தாக்கியதாக மலேசிய வானியல் துறை அறிவித்தது.
சாபாவின் செம்பூர்ணாவிலிருந்து 4.193 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை.
இதனிடையே, இன்று நியு சிலாந்தின் தலைநகரமான வெலிங்டனும் 5.7 சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குலுக்கப்பட்டது என ராய்ட்டர்ஸ் அறிவித்துள்ளது.
450,000 மக்களைக் கொண்ட அந்நகரில் பலரும் நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்தார்கள். ஆனால், யாரும் காயம் அடைந்ததாகவோ சேதங்கள் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை.

























