ஜோகூர் மக்களின் மனதைப் புண்படுத்தியதற்காக நஸ்ரி மன்னிப்பு கேட்க வேண்டும்

apolஅம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினை  தொல்லை  தரும் ஒரு  நாய்  என்று  கூறியதன்வழி   அம்னோ   உச்சமன்ற  உறுப்பினர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  முகைதினை  மட்டுமல்லாமல்  ஜோகூர்  மக்கள்  அனைவரையுமே  அவமதித்து  விட்டார்.

அதற்காக  அவர்  ஜோகூர்  மக்களிடம்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என  பாகோ  அம்னோ இளைஞர்  தலைவர்  முகம்மட்  ஜைட் அப்துல்  ரஹ்மான்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“ஒரு  அமைச்சர்  இப்படி  வெறுக்கத்தக்க  முறையில்  பேசியதைப்  புரிந்துகொள்ள  முடியவில்லை.  அவர்  எங்களை  மட்டுமல்லாமல்  ஜோகூர்  மக்கள்  அனைவரையுமே அவமதித்து  ஆத்திரப்பட  வைத்திருக்கிறார்  ”, என்று  முகம்மட் ஜைட்  கூறினார்.

நஸ்ரி  ஜோகூர்  மக்களை அவமதிப்பது  இது  முதல்  தடவை  அல்ல  என்றும்  அவர்  குறிப்பிட்டார். அமைச்சர்  கடந்த  ஆண்டு  ஜோகூர்  பட்டத்திளவரசருடன்  சர்ச்சையில்  ஈடுபட்டதைத்தான்  அவர்  குறிப்பிடுகிறார்.