இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமது வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்ள இந்திரா காந்தி மனு

 

Indiabidtorecuseபாலர்பள்ளி ஆசிரியர் இந்திரா காந்தி இஸ்லாத்திற்கு மாறி விட்ட அவரது முன்னாள் கணவர் அவரது குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உச்சநீதிமன்ற விசாரணையின் போது அந்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் – தலைமை நீதிபதி அரிப்பின் ஸாக்காரியா மற்றும் மேல்மூறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் முகமட் ராவுஸ் ஷாரிப் – அதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று மனு செய்துள்ளார்.

இக்கோரிக்கைக்கான காரணம் இவ்விரு நீதிபதிகளும் கடந்த காலத்தில் ஒருதலைப்பட்சமான மத மாற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று இந்திரா காந்தியின் வழக்குரைஞர் மு. குலசேகரன் கூறினார்.

நாட்டு மக்களின் மக்கள்தொகையின் அடிப்படையில் பல்லின மற்றும் பலசமய நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கும் நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலரும் இருக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தின் இதர நீதிபதிகள் இவ்வழக்கை செவிமடுக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றாரவர்.