ஷரிசாட்: முகைதின் கூட்டத்துக்குச் சென்று தன்னைத் தற்காத்துக் கொண்டிருக்கலாம்

szatஅம்னோ  துணைத்  தலைவர்  பதவியிலிருந்து  இடைநீக்கம்  செய்யப்படுவதற்குமுன்  தம்மைத்  தற்காத்துக்கொள்ள  முகைதினுக்கு  ஒரு  வாய்ப்பு  கொடுக்கப்பட்டும்  அவர்  அதைப்  பயன்படுத்திக்  கொள்ளாதது  ஏன்  என்று  அம்னோ  மகளிர்  தலைவர்  ஷரிசாட்  அப்துல்  ஜலில்  வினவினார்.

இடைநீக்கம்  முறைப்படி  செய்யப்படவில்லை  என்று  முகைதின்  குறிப்பிட்டிருப்பதற்கு ஷரிசாட்  இவ்வாறு  எதிர்வினை  ஆற்றினார்.

“கூட்டம்(மனோ  உச்சமன்றக்  கூட்டம்)  பற்றி  முன்கூட்டியே  தெரிவிக்கப்பட்டும்  முகைதின்  அதில்  கலந்துகொள்ளவில்லை  என்பது  ஏமாற்றமும்  வருத்தமும்  அளிக்கிறது”, என்றாரவர்.

முகைதின்  அதில்  கலந்துகொண்டு   அவர்  மேற்கொண்டிருப்பதாகக்  கூறப்படும் நஜிப்- எதிர்ப்பு   நடவடிக்கைகள்  பற்றி  விளக்குவார்  என  எதிர்பார்த்ததாக ஷரிசாட்  மலேசியாகினியிடம்   தெரிவித்தார்..