ஏர்செல்-மெக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் அமளி

maxiமலேசியா  உள்பட,  14  நாடுகளில்  “ஐயத்துக்கிடமான  முறையில்  தொழில்  தொடர்பு  வைத்துள்ள”  இந்தியாவின்  முன்னாள்  நிதி  அமைச்சர்  பி.சிதம்பரத்தின்  மகனைக்  கைது  செய்யக்  கோரி   இந்திய  நாடாளுமன்றத்தில்  எதிரணி  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

ஆர்ப்பாட்டம்  செய்தவர்கள்  அனைத்திந்திய  அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழக(அதிமுக)  எம்பிகள்.   சட்ட  அமலாக்க  நிறுவனங்கள்  ஏர்செல்- மெக்சிஸ் ஒப்பந்த விவகாரம்   தொடர்பில்  கைப்பற்றியுள்ள  ஆவணங்களை  அடிப்படையாக  வைத்து  கார்த்தி  சிதம்பரத்தைக்  கைது  செய்ய  வேண்டும்  என்று  அவர்கள்   கோரிக்கை விடுத்தனர்.