யாஸிதி சிறுமியின் மோசமான நிலை: விளக்கும் ஜேர்மன் மருத்துவர்!

german_doctor_001ஐஎஸ் தீவிரவாதிகளின் பலாத்கார பிடியில் இருந்து தப்பிப்பதற்காக சிறுமி ஒருவர், தன்னைத்தானே எரித்துக்கொண்டதில் அவரது முகம் மோசமாக சேதமடைந்துள்ளது என அவருக்கு சிகிச்சை அளித்துள்ள ஜேர்மன் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

யாஸிதி பிரிவினர் மீது இனவெறி தாக்குதல் நடத்தும் ஐஎஸ் தீவிரவாதிகள், அப்பெண்களை நடத்தும்விதம் மிகக்கொடூரமான ஒன்றாகும்.

சமீபத்தில், சிறுமி ஒருவர், ஐஎஸ் தீவிரவாதிகள் தன்னை பலாத்காரம் செய்துவிடக்கூடாது என்ற நோக்கில் தன்னைத்தானே தீவைத்து எரித்துக்கொண்டார்.

தற்போது, அச்சிறுமிக்கு ஜேர்மனியின் Baden-Wurttemberg மாநிலத்தில் உள்ள Jan Ihan Kizilhan என்ற மருத்துவர் சிகிக்சை அளித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் கூறியதாவது, சிகிச்சைக்காக 1,100 பேர் ஜேர்மன் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தீவைத்து எரித்துக்கொண்டால் தனது உடல் பாகங்கள் பார்ப்பதற்கு அறுவருப்பாக இருக்கும், எனவே தீவிரவாதிகள் தன்னை பலாத்காரம் செய்யமாட்டார்கள் என்ற நோக்கில் அச்சிறுமி இவ்வாறு செய்துள்ளார்.

ஆனால், அவளது காது மட்டும் மூக்கினை அவர் இழந்துள்ளார், இன்னும் அவளுக்கு 30 தோல் சிகிச்சை மற்றும் எலும்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

இவ்வாறு ஐஎஸ் தீவிரவாதிகளால் சீரழிக்கப்பட்ட பெண்கள், ஒரு கட்டத்தில் அவர்களிடம் இருந்து தப்பித்து வருகையில், அவர்களது வாழ்க்கை மறுவாழ்வு பெறுவது என்பது கேள்விக்குறியே.

ஏனெனில், இது போன்ற கொடுமைகளை அனுபவித்த பெண்கள் பாலியல் தொழிலுக்கு தங்களை உட்படுத்திக்கொள்கின்றனர் என்று மருத்துவர் கூறியுள்ளார்.

-http://world.lankasri.com