போர்க்குற்ற விசா­ர­ணைக­ளில் நம்­ப­கத்­தன்­மையை ஐக்­கிய நாடுகள் சபை விரும்­பு­கிறது! பர்ஹான் ஹக்

farhan-hagஇலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் போர்க்குற் றம் தொடர்­பான உண்­மை­யான விசா­ர­ணைக­ளி­னூ­டாக நம்­ப­கத்­தன்­மையை வெளிப்­ப­டுத்­து­வ­த­னையே ஐக்­கிய நாடுகள் சபை விரும்­பு­வ­தாக ஐ.நா. செயலாளரின் பிரதி பேச்­சாளர் பர்ஹான் ஹக் தெரி­வித்தார்.

முறை­யான விசா­ர­ணை­யி­னூ­டாக நல்­லி­ணக்கம் மற்றும் இரு­த­ரப்பு பொறுப்­புக்­கூ­ற­லி­னூ­டாக உண்­மை­யான மறு­சீ­ர­மைப்­பிற்கு சிறந்த சந்­தர்ப்­ப­மாக தற்­போ­தைய சூழல் அமைந்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

போரின் இறுதித் தரு­ணத்தில் இடம்­பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்கம் விசா­ரணைப் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வுள்ள நிலை­யா­னது இலங்கை அர­சாங்­கத்தின் உண்­மை­யான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டார்.

நியூ­யோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்­கையின் கடந்­த­கால உள்­நாட்டு போர் சுவ­டு­க­ளி­லி­ருந்து விடு­பட தற்­போது சிறந்த தரு­ணத்தில் உள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட ஆலோ­சகர் எடமா டெயின் தெரி­வித்­துள்ளார்.

ஜெனி­வாவில் நடை­பெ­று­கின்ற 31வது கூட்­டத்­தொ­டரில் கலந்து கொண்டு உரை­யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: