1எம்டிபி அறிக்கை: இரகசியம் என வகைப்படுத்தப்பட்டிருப்பதற்கு என்ஜிஓ கண்டனம்

cynthia1எம்டிபி  மீதான  தலைமைக்  கணக்காய்வாளரின்  அறிக்கை  அதிகாரத்துவ  இரகசியக்  காப்புச்  சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழ்  ஒரு இரகசிய  அறிக்கையாக  வகைப்படுத்தப்பட்டது  நீதிக்குத்  தடைபோடும்  செயலாகும்  என  ஊழல்-எதிர்ப்பு  என்ஜிஓ  ஒன்று  சாடியுள்ளது.

“கணக்கறிக்கையின்  நோக்கமே  பொது  நிதிகள்  தொடர்பில்  ஊழல்  நிகழ்ந்ததாக  என்பதைக்  கண்டறிவதுதான்  என்கிறதுபோது,  இச்செயல்  அந்த  நோக்கத்துக்கே  முரணாக  உள்ளது”, என Centre to Combat Corruption and Cronyism (சி4) என்னும் என்ஜிஓ-வின்  நிர்வாக இயக்குனர்  சிந்தியா  கேப்ரியல்  கூறினார்.

ஓஎஸ்ஏ பெயரில்  அந்த  அறிக்கைக்குப்  பாதுகாப்பளிப்பது  அதைப்  பற்றிப்  பொதுவில்  பேசுவதையும்   விவாதிப்பதையும்   தடைசெய்கிறது.  அதையும்  விட  முக்கியமாக   அது  நீதிக்குத்  தடைபோடும்  செயலாகவும்  அமைகிறது  என்றாரவர்.