“ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும்”: அமெரிக்காவின் புதிய திட்டம்!

b52_america_001உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்கா புதுரக விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, B-1 Lancer போர் விமானங்கள் மூலம் அணு ஆயுதங்களை பயன்படுத்தி, அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அணு குண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தக் கூடிய திறன் கொண்ட B-52 Stratofortress போர் விமானங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான நடவடிக்கைகளில் பயன்படுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் ஆனால் இதுகுறித்த தெளிவான தகவல்களை அமெரிக்கா வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

b52_america_002

-http://world.lankasri.com