ஐஎஸ் தீவிரவாதிகள் பிரதமரைக் கடத்த முயன்றார்களாம்: ஜாஹிட் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்

zahidகடந்த  ஆண்டு  முற்பகுதியில்  டேஷ் (ஐஎஸ்) தீவிரவாதிகள்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கைக்  கடத்த  முயற்சி  மேற்கொண்டதாக   துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  தெரிவித்தார்.

அத்தீவிரவாதிகள்  அமைச்சர்கள்  சிலரையும்  கடத்தத்  திட்டமிட்டிருந்தார்களாம்.

“2015,  ஜனவரி  30-இல்  டேஷ்ஷுடன்  தொடர்புள்ள  13 பேர்  உள்துறை  அமைச்சர் (ஜாஹிட்),  தற்காப்பு  அமைச்சர் (ஹிஷாமுடின்  உசேன்)  உள்பட  தலைவர்கள்  பலரைக்  கடத்தத்  திட்டமிட்டிருந்தனர்”, என  இன்று  நாடாளுமன்றத்தில் ஜாஹிட்  கூறினார்.