திரெங்கானு மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம்

saidதிரெங்கானுவின்  முன்னாள்  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்,  நடப்பு மந்திரி  புசார் அஹ்மட்  ரஸிப்  அப்துல்  ரஹ்மானுக்கு  எதிராக  நம்பிக்கை-இல்லாத்  தீர்மானம்  ஒன்றை  இன்று  மாநிலச்  சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்தார்.

பகல்  மணி  12.30க்கு  அது  தாக்கல்  செய்யப்பட்டதாக  பிகேஆர்  பண்டார்  சட்டமன்ற  உறுப்பினர்  அசான்   இஸ்மாயில்  கூறினார்.

அத்தீர்மானம்மீது  பிற்பகல்  மணி  2.30க்கு  வாக்கெடுப்பு  நடைபெறும்  என்றாரவர்.