நம்பிக்கை-இல்லாத் தீர்மானத்தைச் சட்டமன்றத் தலைவர் நிராகரித்தார்

saidதிரெங்கானுவின்  முன்னாள்  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்,  நடப்பு மந்திரி  புசார் அஹ்மட்  ரஸிப்  அப்துல்  ரஹ்மானுக்கு  எதிராகக்  கொண்டுவந்த   நம்பிக்கை-இல்லாத்  தீர்மானம்  வாக்கெடுப்புக்கு  விடப்படவில்லை.

இன்று  பிற்பகல்  மணி  2.30க்குச்  சட்டமன்றம்  கூடியபோது  அத்தீர்மானம்  நிராகரிக்கப்படுவதாக  சட்டமன்றத்  தலைவர்  முகம்மட்  சுபிர்  எம்போங்  அறிவித்தார்.