நஜிப்- எதிர்ப்பாளர்கள்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்

pol பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிரான  விளக்கக்  கூட்டங்களையும்  பேரணிகளையும்  போலீசார்  தடுத்து  நிறுத்த  வேண்டும்  என  நஜிப்-ஆதரவு  அம்னோ  தொகுதித் தலைவர்கள்  148பேர்  அடங்கிய  குழு  வலியுறுத்தியுள்ளது.

“அம்னோ  தொகுதித்  தலைவர்களான  நாங்கள், மக்களின்  மனத்தைக்  கெடுத்து   அவர்களைத்  தெரு  ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட வைத்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச்  சட்டவிரோதமான  முறையில்  கவிழ்க்கும்  நோக்கத்துடன்  நடத்தப்படும்  குறிப்பாக,  எதிரணியினர்   நடத்தும்  விளக்கக்  கூட்டங்களையும்  சட்டவிரோத  பேரணிகளையும்  கடும்  நடவடிக்கை  எடுத்து  தடுத்து  நிறுத்த  வேண்டும்  என  அரசாங்கத்தையும்  போலீசாரையும்  கேட்டுக்கொள்கிறோம்”, என  அக்குழுவின்  பேச்சாளர்  முகம்மட்  யூசுப்  காசிம்  கூறினார்.