ஐஎஸ் தீவிரவாதிகள் பணத்துக்காக தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டார்களாம்

isஐஎஸ்  தீவிரவாதிகளுக்கு  அவர்களின்  கொள்கைகளைப்  பரப்பப்  பணம்  தேவைப்படுவதாகவும்  அதற்காகத்தான்  அவர்கள்  அரசாங்கத்  தலைவர்களைக்  கடத்தத்  திட்டமிட்டார்கள்  என்றும்  நம்பப்படுகிறது.

அவர்கள்  தங்கள்  குறிக்கோள்  ஈடேற  எதையும்  செய்வார்கள்  என  போலீஸ்  துணை  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  நூர்  ரஷிட்  இப்ராகிம்  கூறினார்.

“ஐஎஸ் மருட்டல்  கடுமையானது. அததரப்பினர்  எங்கிருந்தாலும்  போலீசார்  அவர்களை  எதிர்ப்பார்கள்.  இந்நாட்டில்  அவர்கள்  தங்கள்  கொள்கைகளைப்  பரப்புவதைத்  தடுப்பார்கள்”, என  அவர்  கூறினார்.

-பெர்னாமா