மகாதிர் அம்னோ விவகாரங்களில் தலையிடக் கூடாது, அன்வார் மூசா

musaஅம்னோ-வைவிட்டு  விலகிய  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  அம்னோ  உறுப்பினர்களை  நடப்புப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  நம்பிக்கை-இல்லாத்  தீர்மானம்  கொண்டுவரச்  சொல்வது  சரியல்ல  என்று  அம்னோ  தகவல்  தலைவர்  அனுவார்  மூசா கூறினார்.

“மகாதிரை  அம்னோ விவகாரங்களில்  தலையிட  வேண்டாம்  என்று  கேட்டுக்கொள்கிறோம். அவர்  கட்சியிலிருந்து  விலகிக்  கொண்டார். விலகிய  பின்னர்  கட்சி  விவகாரங்களில்  தலையிடுவது  முறையல்ல”.  நேற்றிரவு  பத்து  பகாட்டில்  ஒரு  விருந்தில்  அனுவார்  மூசா   இவ்வாறு  கூறியதாக  பெரித்தா  ஹரியான்  அறிவித்தது.