‘குர்ஆனை எரித்தார்கள்’ என்று கூறிய மஷிடா குற்றம் புரிந்தார் என்பதற்கு ஆதாரமில்லை

nancy12014-இல்  அம்னோ  மகளிர்  தலைவர்  ஒருவர்  சீனர்கள்  குர் ஆனைத்  தீயிட்டு  கொளுத்தினர்  என்று  கூறியதை  ஒரு  குற்றமாகக்  கருத  ஆதாரங்கள்  ஏதுமில்லை  என்று  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  முடிவுக்கு  வந்ததாக  சட்ட  அமைச்சர்  நன்சி  ஷிக்ரி  கூறினார்.

“விசாரணை  அறிக்கையை  ஏஜி  அலுவலகம்  நன்கு  ஆராய்ந்து  பார்த்தது. மஷிடா  இப்ராகிம் குற்றம்  புரிந்தார்  என்பதற்கு  ஆதாரங்கள் எதையும்  அதனால்  காண  முடியவில்லை”, என்றாரவர்.

மஷிடாவுக்கு  எதிராக  ஏன்  நடவடிக்கை  எடுக்கப்படவில்லை  என்று  வினவிய  கூய்  ஹிசியாவ்  லியோங்(பிகேஆர்- அலோர்  ஸ்டார்)குக்கு  எழுத்துவழி   வழங்கிய  பதிலில்  நன்சி  இதைத்  தெரிவித்தார்.

செனட்டரும்  முன்னாள்  துணை  அமைச்சருமான  மஷிடா  2014  அம்னோ  பொதுப்  பேரவையில்  உரையாற்றியபோது  கெடாவில் சீனர்கள்  குர் ஆனைப்  பக்கம்  பக்கமாக  தீயிட்டு  எரித்ததார்கள்  என்று  கூறினார்.