ஸெட்டியைச் சந்தித்ததாக பொய் சொன்னேனா? புவாட்டைச் சாடினார் முகைதின்

lieமுன்னாள்  துணைப்  பிரதமரான  முகைதின்  யாசின்,  தாம்  பேங்க்  நெகாரா  கவர்னர்  ஸெட்டி  அக்தார்  அசீசைச்  சந்தித்ததாகக்  கூறியது  பொய்யென்று  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  முகம்மட்  புவாட்  ஸர்காஷி  வருணித்திருப்பதை  மறுத்தார்.

தாம்  ஸெட்டியை  சந்தித்ததும்  அச்சந்திப்பில்  அவர்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி)  பற்றிப்  பல  தகவல்களைத்  தெரிவித்ததும்  உண்மையே  என்பதை   முகைதின்  வலியுறுத்தினார்.

“என்னுடைய  கூற்றை  முற்றாக  மறுத்து  ஸெட்டி  அறிக்கை  எதனையும்  விடுக்கவில்லையே. நடந்தது  என்னவென்பது  புவாட்டுக்குத்  தெரியாது. அதனால்  நான்  பொய்யுரைத்ததாக  அவர்  ஊகித்துக்  கொண்டார்”, என  நேற்றிரவு  தம்முடைய  முகநூல்  பக்கத்தில்  முகைதின்  பதிவொட்டிருந்தார்.