தொடர் தோல்வி எதிரொலி: நடுவீதியில் வைத்து குர்தீஷ் வீரர்களை படுகொலை செய்த ஐ.எஸ்

irak_is_001ஈராக்கை சேர்ந்த ஐ.எஸ் அமைப்பினர் தங்களிடம் பிணைய கைதியாக உள்ள 3 குர்தீஷ் வீரர்களை நடுவீதியில் வைத்து கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஐ.எஸ் அமைப்பு இருந்து வருகிறது.

ஈராக் மற்றும் சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பு பல்வேறு நாடுகளிலும் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் வசமுள்ள பகுதிகளை அரசாங்கத்திடமும் ஏனைய கிளர்ச்சி படையினரிடமும் இழந்து வருகின்றனர்.

சமீபத்தில் ஈராக்கில் ரசாக் பகுதியில் உள்ள Hasakah மாகாணத்தின் பெரும்பகுதியை குர்தீஷ் படையினரிடம் ஐ.எஸ் தீவிரவாதிகள் இழந்தனர். இது அவர்களுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.

இந்நிலையில் தங்களிடம் கைதியாக உள்ள குர்தீஷ் படையை சேர்ந்த மூன்று பேரை கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ஈராக்கின் முக்கிய சாலையில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் செய்யப்பட்ட இந்த படுகொலை தொடர்பான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குர்தீஷ் தலைவர் மற்றும் படைகளுக்கு இந்த வீடியோவில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தொடர் வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

-http://world.lankasri.com