தமிழீழத்தை உருவாக்க பிரச்சாரம் செய்யுங்கள்: வீ.உருத்திரகுமாரன்

TGTEVRudra1“எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழீழத்தை உருவாக்கும் வகையிலான பிரச்சார பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபடவேண்டும்” என நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் வீ.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ மக்களின் கரங்களை பலப்படுத்தும் சக்திகளை தமிழக மக்கள் பலப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் எனவும், அதற்கு தேர்தல் களத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலம் பொருந்திய நாடுகள் தமது சுய இலாபங்களுக்காக இலங்கை அரசை ஆதரித்து வருவதாகவும் அவர்கள் சிங்கள அரசுடன் நல்லுறவைப் பேணி தமது சுய இலாபத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சி செய்து வருவதாகவும் உருத்திரகுமாரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் தமிழ் மக்கள் மீது எந்தவித கரிசனையையும் காட்டாத அணுகு முறையை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஏற்படுத்துவதற்கே இலங்கை அரசு முயற்சித்து வருவதாகவும், இதனால் தமிழர்களின் தாயகத்தை வென்றெடுக்க முடியாமல் போகும் நிலை ஏற்படும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் வீ.உருத்திரகுமாரன் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: