கப்பலில் ஏற்பட்ட தீயில் ஒருவர் பலி, ஐவர் காயமடைந்தனர்

tankerபினாங்குக்கு  அப்பால்  Heung-A Pioneer  என்னும்  கப்பலில்  தீ மூண்டு  வெடிப்பு  ஏற்பட்டதில்  பணியாளர்களில்  ஒருவர்  கொல்லப்பட்டார்,  ஐவர்  காயமடைந்தனர்.

கப்பலில்  தீ  பற்றியதாக   நேற்றிரவு  10மணி  அளவில்  அவசர  அழைப்பு  ஒன்று  வந்ததாக  பினாங்கு துறைமுகம் சென்,பெர்ஹாட் (பிபிஎஸ்பி) இடைக்கால  தலைமைச்  செயல்  அதிகாரி  ரோஸிஹான்  அடி  பஹாருடின்  தெரிவித்தார்.

நள்ளிரவு  வாக்கில்  கப்பல்  துறைமுகம்  வந்து  சேர்ந்தது.

“மருத்துவ  அதிகாரிகள்  கப்பலுக்குள்  சென்று  சோதனை  செய்தார்கள். பணியாளர்  ஒருவர்  இறந்து  விட்டார்  என்பதை  அவர்கள்  உறுதிப்படுத்தினர்”,  என்று  கூறிய  ரோஸிஹான்  காயமடைந்த  கப்பல்  பணியாளர்கள்  ஐவரும்  மருத்துவமனைக்கு  அனுப்பி  வைக்கப்பட்டதாக  தெரிவித்தார்.  செபறாங்  ஜெயா  மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட  அவ் வைவரும்  திடமாக  இருப்பதாய்  பெர்னாமா  தெரிவித்தது.

தீ  மூண்டதற்கான  காரணத்தை  அதிகாரிகள்  ஆராய்ந்து  வருகிறார்கள்.