கலைத்தாலும் ஓடாமல் படுத்திருக்கும் இந்த நாய்: ஏன் தெரியுமா ?

பல மனிதர்கள் அந்த நாயை கலைத்துப் பார்த்தார்கள். அது அவ்விடத்தில் இருந்து அகலவில்லை. அங்கேயே படுத்து கண் விழித்து இருந்தது. அதன் கண்களில் இருந்து வரும் கண்ணீரை பலரால் பார்க்க முடிந்தது என்கிறார்கள் அவ்வூர் மக்கள். ஆம் அந்த நாய் அங்கே அழுதுகொண்டு இருப்பது, தனது எஜமான் கொல்லப்பட்ட காரணத்தால் தான்.

குறித்த நாயோடு வீதியில் நடந்து சென்ற எஜமானை ஒரு வாகனம் மோதிவிட்டு சென்றுவிட்டது. அவ்விடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்து போனார். அதனை பார்த்த அந்த நாய், எஜமானுக்கு உதவியது. அவர் அருகே உயிர் பிரியும்வரை இருந்தது. பின்னர் கூட அவ்விடத்தை விட்டுச் செல்லவில்லை. கண்ணீரோடு நிற்கும் அந்த நாய்க்கு மக்கள் சிலர் உணவுகளை வழங்கி வருகிறார்கள்.

-http://www.athirvu.com