லண்டனில் நச்சு வாயு தாக்குதல் நடத்த ஐ.எஸ் திட்டம் வெளியானது

isis_gainstanmerica_001லண்டனில் நச்சுவாயு குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்த, ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டி இருந்தார்கள் என்று பெல்ஜியப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சமீபத்தில் கைதான தீவிரவாதி ஒருவரை விசாரித்தவேளை, லண்டன் மத்திய நகரப் பகுதியில் தாம் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் இருந்து லண்டன் வரை படம் மற்றும் பாரிஸ் வரைபடங்களையும் பெல்ஜியப் பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.

இதேவேளை அணு ஆயுதத்தை பெரும் விலை கொடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் வாங்கியுள்ளதாகவும். ஆனால் அதனை நகர்த்த சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அவர்கள் காத்திருப்பதாகவும் அமெரிக்கா தற்போது எச்சரித்துள்ளது. இன் நிலையில் ஐரோப்பிய தலை நகரங்கள் மற்றும் லண்டனை ஐ.எஸ் தீவிரவாதிகள் குறிவைத்து தாக்க மேலும் பல திட்டங்களை அவர்கள் தீட்டி வருவதாக ஐரோப்பிய ஒன்றிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

-http://www.athirvu.com