நிதி அமைச்சு இன்கோ 1எம்டிபி வாரிய இயக்குனர்களின் பதவி விலகலை உறுதிப்படுத்தியது

 

1mdpboardresigns1எம்டிபி வாரியத்தின் இயக்குனர்களின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்ட்டதை நிதி அமைச்சு இன்கோர்பொரேடெட் உறுதிப்படுத்தியது.

வாரிய உறுப்பினர்களின் பதவி விலகள் மே மாத 31 இல் அமலுக்கு வரும் என்று 1எம்டிபியின் ஒட்டுமொத்த பங்குகளின் உரிமையாளர் என்ற முறையில் நிதி அமைச்சு இன்கோர்பொரேடெட் அறிவித்தது.

1எம்டிபியின் இன்றைய வாணிக நிலையை பிரதிநிதிக்கும் வகையில் புதிய இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சு இன்கோர்பொரேடெட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

1எம்டிபியின் தலைவர் அருள் கந்தா கந்தசாமி அடுத்த அறிவிப்பு வரும் வரையில் அவரது பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் அந்த அறிக்கை கூறிற்று.