ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

arab_saudiசவுதி அரேபியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நான்கு பேரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் சவுதி அரேபியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதனால் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டிவருகிறது.

நாடெங்கிலும் பொலிசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மெக்கா நகருக்கு அருகே வீடு எடுத்து தங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

இதில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பாக கடந்த வாரம் ஆசிர் பிராந்தியத்தில் நடந்த சோதனையின் போது இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், அவர்களிடமிருந்து வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com