கும்பமேளா என்று சொல்லி சம்பந்தன் மற்றும் மைத்திரியை அழைத்த மோடி:நடக்கப் போவது ?

இந்தியாவில் கும்பமேளா நிகழ்வு நடக்க இருப்பதை காரணம் காட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் இரா சம்பந்தன் அவர்களை இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளார். பிரித்தானியா சென்று காமன்வெலத் மாநாட்டில் கலந்துகொண்ட மைத்திரி, இந்தியா செல்வது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு இருந்தது. தற்போது எதேட்சையாக இரா சம்பந்தன் இந்தியா சென்றது போலவும். அவ்வேளை பார்த்து மைத்திரியும் இந்தியா சென்றது போன்ற ஒரு தோற்றப்பட்டு இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் இந்தியாவில் வைத்து, மோடி தலைமையில் ஒரு பாரிய பேச்சுவார்த்தை ஒன்று நடக்கவுள்ளது. பல மணி நேரமாக நடக்கவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு திட்டத்தை கொடுப்பது தொடர்பாக மோடி அவர்கள் மைத்திரிக்கு அழுத்தம் கொடுக்க உள்ளார் என்று டெல்லியில் உள்ள வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். உயர்மட்ட தலைவர்கள் ஒரு சிலரே இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-http://www.athirvu.com

TAGS: