இந்தியாவில் கும்பமேளா நிகழ்வு நடக்க இருப்பதை காரணம் காட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் இரா சம்பந்தன் அவர்களை இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளார். பிரித்தானியா சென்று காமன்வெலத் மாநாட்டில் கலந்துகொண்ட மைத்திரி, இந்தியா செல்வது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு இருந்தது. தற்போது எதேட்சையாக இரா சம்பந்தன் இந்தியா சென்றது போலவும். அவ்வேளை பார்த்து மைத்திரியும் இந்தியா சென்றது போன்ற ஒரு தோற்றப்பட்டு இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் இந்தியாவில் வைத்து, மோடி தலைமையில் ஒரு பாரிய பேச்சுவார்த்தை ஒன்று நடக்கவுள்ளது. பல மணி நேரமாக நடக்கவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு திட்டத்தை கொடுப்பது தொடர்பாக மோடி அவர்கள் மைத்திரிக்கு அழுத்தம் கொடுக்க உள்ளார் என்று டெல்லியில் உள்ள வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். உயர்மட்ட தலைவர்கள் ஒரு சிலரே இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-http://www.athirvu.com
1. இந்திய அரசின் தலையீடு நம்பிக்கையுடையதாக இருக்காது. இந்தியா நாடு நிலையோடு செயல்படுவதை எதிர்ப் பார்க்க முடியாது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்த நடு நிலைக் கோட்ப்பாட்டிற்க்கு முற்றிலும் முரணாது. செய்வதையெல்லாம் மறைமுகமாக செய்து விட்டு இப்போது நல்லப் பிள்ளைப் போல் நடந்துக் கொள்வது நம்பக் கூடியதல்ல. இந்திய அரசு ஒரு அடிப்படைக் கோட்ப்பாட்டில்தான் ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். தமிழர்கள் தனி நாடு கேட்க முடியாது; சுயாட்சியையும் கேட்க முடியாது;. தன்னாட்சிப் பெற்ற மாநிலமும் அமைவதை இந்திய அரசு ஆதரிக்காது. இந்தியாப் போன்று கூட்டாச்சி அமைவதையும் இந்தியா ஏற்காது. வெறும் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தோடு, இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டுதான் தீர்வை ஏற்ப்படுத்துவார்கள். இங்கே மோடி அவர்கள் சற்று மாறுப் பட்ட நிலைப்பாட்டை கொஞ்சம் அனுதாபத்தோடும் மனிதாபட்தோடும் அணுகலாம்; இதுதான் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கும் பாஜகவிற்குமுள்ள வேறுபாடு. இந்த அடிப்படையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அன்று போர் நடந்த நேரத்தில், இனப் படுகொலை அரங்கேறிய நேரத்திலும் இந்திய அரசு தனது கிரிகட் வீரர்களை தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு அனுப்பியதை நாம் மறக்க முடியுமா? வங்க தேசத்தை உருவாக்கினார்கள்; ஈழத் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை எப்படி அணுகினார்களென்று எல்லோருக்கும் தெரியும். .ஏனென்றால் பாகிஸ்தான் பகை நாடு; இலங்கை நட்பு நாடு. இதுதான் இவர்களின் வெளியுறவுக் கொள்கை. இந்த ஆட்சியாளர்கள் தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வில்லையே!
பழனிசாமி கருத்து சரியானதே,!
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
ஈழத் தமிழர்களா ? யார் ? அன்று நாங்கள் தமிழர்கள் அல்ல ஜெயவர்த்தனா ஆட்களாக்கும் என்று கூறியவர்கள் அல்லவா ?
ஐயா வேங்கையன் அவர்களே – நீங்கள் கூறுவது சரி–ஆனால் உண்மை நிலை என்ன? நடக்குமா? நம்மிடம் திறமையான தலைகள் இல்லையே– தலைகள் என்று கூறிக்கொண்டு பலர் இருந்தாலும் எல்லாம் உதவாக்கரைகள். இவ்வளவு நாரிபோய் இருக்கும் நம் இனத்தை ஒன்று படுத்தவே முடியாத தலைகள்– எப்படி இழந்த மண்ணை திரும்ப பெறமுடியும்? சிறிய கட்ச தீவையே ஒன்றும் புடுங்க முடிய வில்லை — சிங்களவன் பண்ணும் அநியாயத்தை தடுக்க முடிய வில்லை– அத்துடன் மானம் கெட்ட நம்மவன்கள் யாருக்கு பால் அபிஷேகமும் அட்டை படம் வைக்கிரான்கள்?
என் தாய் தமிழ்,தமிழர் வாழ்ந்து ஆண்ட ஆதாரங்களை ஒவ்வொரு நாளும் எம் மண்ணிலிருந்து திட்டமிட்டு அழிக்க படுகின்ற உண்மையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும்.எங்கள் முன்னோர்களின் நிலப்பரப்பை மீட்டு உரிமைகளை நிலைநிறுத்தி தமிழர் நெஞ்சங்களில் சுடர்விடும் தீ அனையாது பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும் ஐயா…
எனவே இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு என்ற எங்கள் முழக்கம் இனி வரும் சந்ததியருக்கு சக்திமிக்க தூண்டுதலாகவே அமையும்.