நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான்! வட்டுக்கோட்டை 40வது வாழ்த்துச் செய்தியில் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு!

mavai_001நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது எழுச்சி நிகழ்வுக்காக நாடுகடந்த தமிழீழ் அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து நகர்ந்து விட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய ஊடகமொன்று கருத்து வெளியிட்டிருந்த நிலையில், மாவை சேனாதிராஜாவின் இக்கருத்து வெளிப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டின் மைய எழுச்சி நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் நியூயோர்க்கில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வுக்கு பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள், பன்னாட்டு பிரமுகர்கள், என பலரும் வாழ்த்துச் செய்திகளை வழங்கி வருகின்றனர்.

தனது உடல்நிலை காரணமாக நேரடியாக நியூயோர்க், நிகழ்வில் பங்கெடுத்துக் கொள்ள முடியாமை குறித்து பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு கடிதமூலம் தெரிவித்திருந்த மாவை சேனாதிராஜா, நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான் என தனது வாழ்த்துச் செய்தியின் பிழிவாக தெரிவித்துள்ளார்.

தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழ் மக்களுடைய அரசியல் பெருவிருப்பின் வடிவமாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: