அந்த ஓஎஸ்ஏ கடிதம் உண்மையானது என்றால் போலீஸ் பேங்க் நெகரா அதிகாரிகளை விசாரிக்கும்

osa letterவால்  ஸ்திரிட்  ஜர்னல்  வெளியிட்ட  ஓஎஸ்ஏ கடிதம்  உண்மையானதுதான்  என்றால்   அது  எப்படி   கசிந்தது  என்பதை  போலீஸ்  விசாரிக்கும்.

இதைத்  தெரிவித்த  தேசிய  போலீஸ்படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்,  முதலில்  அது  அதிகாரத்துவ  இரகசியக்  காப்புச்  சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழ்  வரும்   கடிதம்தானா  என்பதை  முடிவு  செய்தாக  வேண்டும்  என்றார்.

அந்தக்  கடிதம்  உண்மையானதுதான்  என்று  தெரிய  வந்தால்  அதைக்  கசிய  விட்டவர்  யார்  என்பதை  போலீஸ்  விசாரிக்கும்  என்றவர்  சொன்னார்.