செக்ஸ் சிறுவர்களை பயன்படுத்தி போலீசாரை கொல்லும் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை கொல்லவும், அவர்களின் அலுவலகங்களின் மீதும் தாக்குதல் நடத்தவும் தலிபான்கள் தற்கொலை படை தீவிரவாதிகளை பயன்படுத்தி வந்தனர்.தற்போது போலீசாரை கொலை செய்ய செக்சில் ஈடுபடும் சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். சோதனைச் சாவடிகள் மற்றும் போலீஸ் அலுவலகங்களில் தாக்குதல் நடத்தும் முன்பு அழகான, கவர்ச்சிமிக்க ‘செக்ஸ்’ சிறுவர்களை அங்கு அனுப்புகின்றனர்.

அங்கு பணியில் இருக்கும் கமாண்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட வைக்கின்றனர். அப்போது அந்த சிறுவர்கள் போலீஸ் அதிகாரிகளையும், போலீசாரையும் விஷம் மற்றும் கடுமையான போதை பொருள் போன்றவற்றின் மூலம் கொலை செய்கின்றனர்.

அதன் பிறகு அங்கு தாக்குதல் நடத்தி கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றனர். இச்சம்பவங்கள் உருஸ்கான் மாகாணத்தில் பெருமளவில் நடப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு இது போன்ற ‘செக்ஸ்’ நடவடிக்கைகளால் ஜனவரியில் 6 பேரும், ஏப்ரலில் 6 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான போலீசார் கொலை செய்யப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை உருஸ்கான் மாகாண தலைமை போலீஸ் அதிகாரி குலாம் சதி ரோக் லெவானை தெரிவித்துள்ளார்.

-http://www.athirvu.com