குற்றத்தைத் தடுக்கும் பொறுப்பில் இருந்தவரே மிரட்டிப் பணம் பறித்தாராம்

ngoஅவர்  அரசுசாரா  குற்றத்  தடுப்பு  அமைப்பு  ஒன்றின்  தலைவர்.   சட்டவிரோதமாக  சூதாட்டம்  நடந்தால்  அது  பற்றி  போலீசில்  தெரிவிக்க  வேண்டியது  அவருடைய  பொறுப்பு.  ஆனால்,  அவரே    சூதாட்டதை  நடத்தி  வந்த  ஒருவரை  மிரட்டிப்  பணம்  பறித்து  வந்திருக்கிறார்.

30-வயது  நிரம்பிய  அந்த  டத்தோவை  புக்கிட்  அமான்   குற்றப்  புலனாய்வுத்  துறை   அதிகாரிகள்  நேற்றிரவு  நீலாய்  டோல்  பிளாசாவில்  கைது  செய்தார்கள்  என  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ் கூறியது.

சூத்தாட்டம்  நடத்தி  வந்தவர்  மாதம்  25,000  ரிங்கிட்டை  அந்த  டத்தொவுக்குக்  கொடுத்து  வந்ததாக  தெரிகிறது. கொடுத்துக்  கொடுத்து  அலுத்துப்  போன  அவர்  ஒரு  கட்டத்தில்  போலீசில்  புகார்  செய்து  விட்டார்.