பங்: செம்போர்னாவில் உறுப்பினர்கள் வெளியேறியதுபோல் பாகோ, கெடா அம்னோவிலும் நிகழ்ந்து விடக்கூடாது

bungபாகோ  எம்பி  முகைதின்  யாசினும்  கெடா  முன்னாள்  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரும்  கட்சிநீக்கம்  செய்யப்பட்டதற்கு  எதிர்ப்புத்  தெரிவிப்பதற்காக  பாகோவிலும்  கெடா  அம்னோவிலும்  உறுப்பினர்கள் பெரும்  எண்ணிக்கையில் கட்சியை  விட்டு  வெளியேறும்  நிலை  ஏற்பட்டு  விடக்  கூடாது  என  அம்னோ  உச்ச  மன்ற  உறுப்பினர்  பங்  மொக்தார்  ரடின்   என்று  வேண்டிக்  கொண்டார்.

செம்போர்னாவில்  நடந்ததைக்  கருத்தில்  கொண்டே  அவர்  அப்படிச்  சொன்னார்.   எம்பி  முகம்மட்  ஷாபி  அப்டால்  கட்சியிலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்டதற்குக்  கண்டனம்  தெரிவிக்கும்  வகையில்  சுமார்  300  செம்போர்னா  அம்னோ  உறுப்பினர்கள்  கட்சியிலிருந்து  வெளியேறியதை  அடுத்து  பிஎன்  ஆதரவு  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  மன்றத்தின்  இணைய  செய்தித்  தளத்திடம்  பங்  பேசினார்.

“செம்போர்னாவில்  இப்படி  ஒன்று  நடந்ததை  எண்ணி  வருத்தப்படுகிறேன்”, என பங்  கூறினார்.

“நம்மை  நாம்  வலுப்படுத்திக்  கொள்ள  வேண்டும்.  தலைவர்கள்  வருவார்கள்,  போவார்கள்.  ஆனால்,  கட்சிப்  போராட்டம்  தொடர  வேண்டும்”,  என்றாரவர்.