தைவான் ரயிலில் குண்டு வெடிப்பு: 25பேர் காயமடைந்தனர்

capitalநேற்று தைவான் தலைநகரில்  பயணிகள்  ரயில்  வண்டி  ஒன்றில்  நிகழ்ந்த வெடிப்பு  ஒன்றில்  25 பேர் காயமடைந்தனர்.

நள்ளிரவில்  குழாய்க்  குண்டு  என்று  ஐயுறப்படும்  ஒன்றினால்  நிகழ்ந்த  அந்த  வெடிப்பினால்  தைபே  சோங்ஷான்  நிலையமே  அதிர்ந்ததாக சம்பவத்தை  நேரில்  கண்டவர்கள்  தெரிவித்தனர். வெடிப்பு  நிகழ்வதற்கு   முன்பு  ஒரு  நபர்  கருப்புநிறத்தில் நீளமான  ஒன்றை  ரயிலில்  வைத்துச்  சென்றதைக்  கண்டதாகவும்  அவர்கள்  தெரிவித்தனர்.