ஜெர்மனியில் ரெயிலில் கோடாரியால் தாக்குதல்: 20 பேருக்கு காயம்

germany_sam_001ஜெர்மனியில் பேவரியா என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ளூர் ரெயிலில் மர்ம நபர் ஒருவர் கோடாரியால் பயணிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று ஜெர்மன் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் தொடர்பான தகவல்களை தேடி வருகின்றனர். விரைவில் தாக்குதலின் உண்மை சம்பவத்தை கண்டுபிடிப்போம் என்றும் ஜெர்மனியின் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் தொடர்பான வேறு எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை.

-http://www.athirvu.com