பங்களாதேஷில் தாக்குதல் நடத்திய 9 இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுகொலை!

bangladesh_soldiersபங்களாதேஷ்-டாக்கா பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 9 தீவிரவாதிகளை அந்நாட்டு பொலிஸார் சுட்டு கொலை செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கை குண்டுகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே பொலிஸார் கல்யன்பூர் ( Kallyanpur) தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் காரணமாக பங்களதேஷில் உள்ள எழுத்தாளர்கள்,வலைபதிவாளர்கள் (bloggers),மதம் சார்ந்த அங்கத்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்திற்கு முதல் அதாவது ஜூலை முதலாம் திகதி டாக்காவில் இடம் பெற்ற தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களுள் பெறும்பாலானோர் வெளிநாட்டவர்களே என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தீவிரவாதிகள் என கருதப்பட்டவர்களை உடனடியாக சுட்டுக் கொலை செய்ததாகவும்,சந்தேகநபர்களில் ஒருவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தீவிரவாதிகள் குறித்தான தேடுதல்கனை இன்னும் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

-http://news.lankasri.com