கடை உரிமையாளரைப் பிணை பிடித்து வைத்திருந்த ஆடவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்

polisநேற்றிரவு,  ஜோகூர்  ஆயர்  ஈத்தாமில்  ஒரு  கடை  உரிமையாளரான  53-வயது  பெண்மணியை    பிணை   பிடித்து   வைத்திருந்த   ஆடவன்  ஒருவன்  சுட்டுக்  கொல்லப்பட்டான்.

அந்த  44-வயது   ஆடவன்  இரவு   மணி    8.20 அளவில்  கடைக்குள்  புகுந்து  கடைக்கார   அம்மாவிடம்   பணம்   கொடுக்குமாறு   கோரியிருக்கிறான்   என    ஜோகூர்  குற்றப்  புலன்  விசாரணைத்  துறை    தலைவர்  கமருல்    ஜமான்   மாமாட்   தெரிவித்தார்.

பணம்  கிடைக்காததால்   அவன்  அப்பெண்மணியை  ஒரு   அறைக்குள்  அடைத்து  வைத்திருக்கிறான்.  போலீசார்   அவனுடன்   நான்கு   மணி  நேரம்   பேச்சு   நடத்தினர்.

பிணைபிடித்து வைக்கப்பட்டிருந்த   பெண்மணியின்  குடும்பத்தார்   ஆடவன்  கோரிய  ரிம300,000  கொடுத்தும்கூட   அவன்  அப்பெண்மணியை  விடுவிக்க  மறுத்தான்.

“அதன்பின்   அவன்   அவரைச்   சுட   முயன்றான்.  அதைப்  பார்த்ததும்   போலீசார்   நடவடிக்கையில்   இறங்கி   அவனை  நோக்கிச்   சுட்டனர்”, என  கமருல்  ஜமான்    கூறினார்.