முகைதின் யாசின் சவால்: நஜிப், என் மீது வழக்கு போடுங்கள்

 

Muhyddinproofagதாம் பிரதமர் நஜிப் மீது சாட்டியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றால் தமக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அவரது முன்னாள் எஜமானர் நஜிப்புக்கு சவால் விட்டிருக்கிறார்.

இது நஜிப் 1எம்டிபி மூலமாக பொதுப் பணத்தை மோசடி செய்து நாட்டிற்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது பற்றிய குற்றச்சாட்டாகும்.

“இதை மறுக்குமாறு நஜிப்புக்கு நான் சவால் விடுகிறேன். இக்குற்றச்சாட்டுகளுக்கு நீரே பதில் அளிக்க வேண்டும்.

“உமக்காக பதில் கூறவும் உம்மை பாதுகாக்கவும் இருக்கும் (உமது பத்திரிக்கை செயலாளர்) தெங்கு ஷாரிப்புடின் (தெங்கு அஹமட்) போன்ற கொத்தடிமைகளையும் மற்றவர்களையும் பயன்படுத்தாதீர்.

“ஆண் மகனாக இருப்பீர். நான் கூறுவது உண்மை இல்லை என்றால், என் மீது வழக்கு தொடுக்குமாறு நஜிப்புக்கு நான் சவால் விடுகிறேன்”, என்று முகைதின் யாசின் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.