லாவோசில், ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் நேற்றிரவு விருந்து நிகழ்வு ஒன்றில் சந்தித்துக் கொண்டனர்.
மாநாட்டுக்குத் தம் துணைவியாருடன் சென்றுள்ள பிரதமர், ஒபாமாவுடன் “இனிமையாக உரையாடியதாக” முகநூலில் குறிப்பிட்டிருந்தார். ஒபாமாவுடன் இருப்பதைக் காண்பிக்கும் நிழல்படமொன்றையும் அவர் பதிவிட்டிருந்தார்.
1எம்டிபி நிதி மோசடிக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடுத்துள்ளதை அடுத்து நஜிப்பும் ஒபாமாவும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
“இனிதே உரையாடினேன்” எங்கேயோ இடிக்குதே !
ஒருவேளை 1MDB விவகாரம் சார்பில் DOJ நடவடிக்கை புஷ்வானமாகி விட்டதா ? அல்லது நன்கொடை பரிமாற்றம் இனிதே வெற்றிகரமாக நடந்தேறியதா ? பிரதமருக்கே வெளிச்சம்
இது அனைத்துலக ராஜதந்திரம் -வேறு ஒன்றும் கிடையாது.