நஜிப்: ஒபாமாவுடன் இனிதே உரையாடினேன்

najibலாவோசில்,   ஆசியான்  உச்சநிலை  மாநாட்டில்  கலந்துகொண்டிருக்கும்    பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்கும்    அமெரிக்க    அதிபர்   பராக்  ஒபாமாவும்  நேற்றிரவு    விருந்து  நிகழ்வு  ஒன்றில்   சந்தித்துக்  கொண்டனர்.

மாநாட்டுக்குத்    தம்   துணைவியாருடன்     சென்றுள்ள   பிரதமர்,    ஒபாமாவுடன்  “இனிமையாக  உரையாடியதாக”   முகநூலில்  குறிப்பிட்டிருந்தார்.  ஒபாமாவுடன்  இருப்பதைக்  காண்பிக்கும்     நிழல்படமொன்றையும்    அவர்  பதிவிட்டிருந்தார்.

1எம்டிபி  நிதி  மோசடிக்கு  எதிராக    அமெரிக்க   நீதித்துறை     வழக்கு   தொடுத்துள்ளதை   அடுத்து    நஜிப்பும்  ஒபாமாவும்    சந்தித்துக்  கொள்வது   இதுவே   முதல்  முறையாகும்.